ராசிபுரம் நகர பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாய் மறைவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக வாஜ்பாய் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் துவங்கிய மௌன ஊர்வலத்தில் பாஜக நகர மூத்த நிர்வாகி டி.எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. இதில் மாவட்ட விஎச்பி., தலைவர் ஆர்.யு.ரகுபதி, நகர பாஜக தலைவர் மணிகண்டன், நகர பாஜக பொதுச்செயலர் குமார், நகர ஆர்எஸ்எஸ்., தலைவர் வி.ராமதாஸ், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட பாஜக பொதுச்செயலர் செல்வகுமார், செயலாளர் ஹரிஹரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில விவசாயப் பிரிவு செயலர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.