ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை (டிச.10) நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கைலாசநாதர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு 32-ம் ஆண்டாக சங்காபிஷேக விழா நடைபெறுகிறது.
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கடைஞாயிறு விழா நடத்தப்பட்டது. பிரம்மா சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. திங்கள்கிழமை ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீசண்முகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடத்தப்பட்டு, யஜமான சங்கல்பம், ஸ்ரீகணபதி பூஜை, புண்ய ஆவாஹனம், பஞ்சகவ்ய நடத்தப்பட்டு பின்னர் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.