சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் ஜி.ஆர்.சுப்ரமணி, நாமக்கல் நகர தலைவர் ராம்குமார், மாவட்ட பொதுச்செயலர் முருகன், மகளிர் அணி துணைத்தலைவர் பரிமளா, மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம், கொல்லிமலை வட்டாரத் தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.