நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது.
அவைத் தலைவர் ரா.உடையவர் தலைமை வகிக்கிறார். வரும்16ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் செ.காந்திச்செல்வன் தெரிவித்துள்ளார்.