நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி சிவராத்திரி மற்றும் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 6 மணிக்கு தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு திருக்கல்யாணம், அதனைத் தொடர்ந்து விருந்து நடைபெறும். மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரைவீரசுவாமி, கருப்பண்ணசுவாமி திருவீதி உலா நடைபெறும்.
புதன்கிழமை காலை பச்ச பூஜை, பகல் 1 மணிக்கு கருப்பண்ணசுவாமி, மதுரைவீரசுவாமிக்கு பொங்கல் வைத்தல், மாலை 5 மணிக்கு முப்பூஜை நடைபெறும். வியாழக்கிழமை காலை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.