நாமக்கல் பெரியாண்டவர், அங்காளம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் உழவர் சந்தை பின்புறம் கோட்டை முனியப்பன் கோயில் அருகில் பெரியண்டிச்சி, பெரியாண்டவர் அங்காளம்மன் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு முப்பூஜை திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி காலை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 12-ஆம் தேதி காலை கரகம் பாலித்து சக்தி அழைத்தல் மற்றும் இரவு 12 மணிக்கு அம்மனுக்கு கண்திறக்கும் பூஜை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை சேந்தமங்கலம் சாலையில் இருந்து மயான கொள்ளை சத்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 12 மணிக்கு முப்பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 11 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.