பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியில் மணல் கடத்திய லாரியை பரமத்தி வேலூர் வட்டாட்சியர் பறிமுதல் செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாலப்பட்டியில் மணல் கடத்திச் செல்வதாக பரமத்திவேலூர் வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி, வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியைத் தடுத்து நிறுத்து சோதனையிட்டதில் மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் மணலை பாலப்பட்டியிலிருந்து சேலத்துக்குக் கடத்துவதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் லாரியை பறிமுதல்
செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் மணல் லாரியை ஓட்டி வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் நிவேஷ்குமார் (25), லாரி உரிமையாளர் அருள்மணி ஆகியோரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.