நாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
விழாவில் காலை 9 மணிக்க பொங்கல் வைத்தல் நிகழ்வும், 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 11 மணிக்கு விவசாயிகளை பாராட்டும் நிகழ்வும் நடைபெறும். விவசாயிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசுகிறார். சென்னை அறிவியல் நகர துணைத்தலைவர் உ.சகாயம் பங்கேற்று பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகிறார்.