சுவாமி விவேகானந்தரின் 155ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் நாமக்கல் நகர கிளை சார்பில் தேசிய இளைஞர் எழுச்சி நாளாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற விழாவுக்கு அகில பாரதிய வியார்த்தி பரிஷத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சக்தி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பாரதிய கிஷான் சங்க நிர்வாகி ஸ்ரீகணேசன் சுவாமி விவேகானந்தர் குறித்து பேசினார்.
அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவப்படத்துக்கு பாஜக நகரச் செயலர் வரதராஜன், மாவட்ட பொதுச் செயலர் முத்துக்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன், வழக்குரைஞர் குப்புசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.