நாமக்கல் மாவட்ட காவல் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தொடங்கிவைத்தார். உறி அடித்தல், இசை நாற்காலி, அதிர்ஷ்ட வட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. காவல் துறை அமைச்சு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.