குமாரபாளையம் ஸ்ரீகம்பத்துக்காரர் மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் பங்கேற்றுப் பேசினார். பள்ளியின் சிறப்பாசிரியர் லாவண்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.