ராசிபுரம் அருகேயுள்ள ஒ.சௌதாபுரம் பகுதியில் கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர்கள் சங்கம் நாமக்கல் கிளை சார்பில் விவேகானந்தர் பிறந்த தினவிழா மற்றும் இளைஞர் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, அங்கு நூலகம் முன்பாக உள்ள விவேகானந்தர் சிலைக்கு விவேகானந்தர் அறக்கட்டளை நிர்வாகி விக்னேஷ் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இளைஞர் தின உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர், அரசு உயர் நிலைப் பள்ளியில் விவேகானந்தர் தொடர்பான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை இராமகிருஷ்ண மிஷன் முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலர் கே.அருணாசலம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.