jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்

திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்னை: கோயில்களுக்கு "சீல்

By DIN  |   Published on : 14th January 2018 01:54 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டதால், வருவாய்த் துறை அதிகாரிகள் கோயில்களுக்கு சனிக்கிழமை "சீல்' வைத்தனர்.
நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட தும்மங்குறிச்சி மேலப்பட்டி, மேல்முகம் கிராமத்தில் சின்ன காமாட்சி அம்மன், பெரிய காமாட்சி அம்மன் மற்றும் பெரியசாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி ஒரு தரப்பினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், வழக்கத்துக்கு மாறாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 4-ஆம் தேதி ஊரில் கூட்டம் போட்டு, மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வரும் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இக்கோயிலில் திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். மற்ற சமுதாய மக்களை திருவிழாவில் கலந்துகொள்ள விடாமல் தடை செய்யவும் முடிவு செய்து உள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்தி, ஜாதி கலவரம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், நாமக்கல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில், மேல்முகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில், கொங்கலம்மன், விநாயகர் கோயில், பெரியகாமாட்சி அம்மன், சின்ன காமாட்சி அம்மன், பெரியசாமி கோயில் மற்றும் வீரமாத்தியம்மன் கோயில் உள்பட 8 கோயில்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி "சீல்' வைத்தனர். இதேபோல் கோயில் வீடு ஒன்றுக்கும் "சீல்' வைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்