நாமகிரிப்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன.18-இல் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி: நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன.18-இல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, மெட்டாலா, ஆயில்பட்டி, காக்காவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.