புதிய பாடநூல் பயிற்சி வகுப்பு

எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் முதல் வகுப்புக்கான புதிய பாடநூல் குறித்த பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் முதல் வகுப்புக்கான புதிய பாடநூல் குறித்த பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில், தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாலதி, ராஜவேல் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வி பயிற்சி அளித்து பாடத் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் போன்ற பாடங்களை கற்பிப்பது குறித்தும், அது சார்ந்த விளக்கங்களையும் அளித்தார். மாணவர்களிடம் கற்றல் திறன்கள், வெளிப்பாடு, கற்பிக்கும் உத்திகள் குறித்து கருத்தாளர்களாக செயல்பட்ட ஆசிரியர்களிடம் விவாதிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com