திமுக மாவட்ட பொறுப்பாளராக செ.காந்திச்செல்வன் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதையடுத்து, நாமக்கல்லில் புதன்கிழமை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ரா.உடையவர், பொருளாளர் செல்வம், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப.ராணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், ராமசுவாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மீண்டும் வாய்ப்பு: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலராக இருந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன், 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நீக்கப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்ததால், அவரின் பதவியை கட்சி தலைமைபறித்தது.
 இதன்பிறகு அக்கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவர் பார்.இளங்கோவன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பார்.இளங்கோவன் மீது கட்சி நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
 இந்த நிலையில் தான் கட்சித் தலைமை அண்மையில் பார்.இளங்கோவனை நீக்கிவிட்டு, முன்னாள் மத்திய இணைஅமைச்சர் செ.காந்திச்செல்வனை மாவட்ட பொறுப்பாளராகநியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com