விவசாய நிலத்தில் சவுக்கு மரங்களை வெட்டியதாக, மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் தொட்டிபட்டி தட்சன்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி (47). இவரது தோட்டத்தில் சவுக்கு மரங்களை வைத்து வளர்த்து வருகிறார்.
இவரின் வயல் பகுதியில் மின்வாரியத்தின் மின்கம்பிகள் செல்கின்றன. இந்தப் பகுதியில் நல்ல நிலையில் வளர்ந்திருந்த 50-க்கும் மேற்பட்ட சவுக்கு மரங்களை தனக்கு தெரியாமல் மின்வாரிய ஊழியர்கள் வெட்டிவிட்டதாக சத்தியமூர்த்தி வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.