நாமக்கல் மாவட்ட காவல்துறையில் 25 ஆண்டுகள் தண்டனை எதுவுமின்றி சிறப்பாகப் பணியாற்றிய 11 பேரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
காவல்துறையில் 25 ஆண்டுகள் தண்டனை எதுவுமின்றி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அரசு பாராட்டி ரூ.2,000 வெகுமதியும், பணியை பாராட்டி சான்றிதழும் வழங்குகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தண்டனை எதுவுமின்றி சிறப்பாகப் பணிபுரிந்து வரும் 11 காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டி, சான்றிதழையும், வெகுமதியையும் வழங்கினார்.