பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 490-க்கு மேல் 4 மாணவர்களும், 480-க்கு மேல் 24 மாணவர்களும், 470-க்கு மேல் 44 மாணவர்களும், 450-க்கு மேல் 77 மாணவர்களும், 400-க்கு மேல் 113 மாணவர்களும் மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சமூக அறிவியலில் 23 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 7 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 13 மாணவர்களும், தமிழ் பாடத்தில் 2 மாணவர்களும் 100-க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், இயக்குநர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.