பரமத்தி மலர் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம்

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 490-க்கு மேல் 4 மாணவர்களும், 480-க்கு மேல் 24 மாணவர்களும், 470-க்கு மேல் 44 மாணவர்களும், 450-க்கு மேல் 77 மாணவர்களும், 400-க்கு மேல் 113 மாணவர்களும் மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சமூக அறிவியலில் 23 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 7 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 13 மாணவர்களும், தமிழ் பாடத்தில் 2 மாணவர்களும் 100-க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், இயக்குநர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com