மக்கள் பாதை அமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாமக்கல்லில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய உடனடியாக

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாமக்கல்லில் மக்கள் பாதை அமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள மக்கள் பாதை அமைப்பு மாவட்ட தலைமையகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு நாமக்கல் நம்பிக்கை இல்ல இயக்குநர் கதிர்செல்வன் தலைமை வகித்தார். மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என அஞ்சலிக் கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com