மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) ராசிபுரம் வருகிறார். சேலத்தில் இருந்து வரும் அவருக்கு ஆண்டகளூர்கேட்டில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பகல் 3 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். புதுசத்திரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.மணி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஜெ.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.