பரமத்தியில் நிதி நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி அருகே உள்ள உப்புபட்டிபுதூரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் சுப்பிரமணி (40). இவர் பரமத்தியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார்.
இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து பரமத்தி செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றார். இந்த நிலையில், பரமத்தி பழைய பேரூராட்சி அலுவலகத்துக்கு மேல் உள்ள அறையில் மின் விளக்குகள் எரிவதை பார்த்த சிலர் சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சுப்ரமணி மின் விசிரியில் கயிற்றால் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து பரமத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் சுப்ரமணியின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சுப்ரமணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.