நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன், ஓய்வூதியர் சங்கத்தினர் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் நாமக்கல் கிளைத் தலைவர் அங்குராஜ் தலைமை வகித்தார்.
அதில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ள உள் மற்றும் வெளி நோயாளிகளின் மருத்துவ செலவு மற்றும் மருத்துவப்படி ஆகிய கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் கோபால், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.