திருச்செங்கோடு அருகே தீ விபத்து

திருச்செங்கோடு அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் இருசக்கர வாகனம், உடைமைகள் சேதமடைந்தன.

திருச்செங்கோடு அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் இருசக்கர வாகனம், உடைமைகள் சேதமடைந்தன.
 சித்தளந்தூர் பனங்காடு பகுதியில் வசிப்பவர் செல்லம்மாள். இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில், வீட்டுக்குள் இருந்த இருசக்கர வாகனங்கள், வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் சாம்பலாகின. தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி நிகழ்விடம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினார். உடன் திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com