கருணாநிதிக்கு புகழ் வணக்கம் நிகழ்ச்சி

நாமக்கல்லில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.காந்திசெல்வன் தலைமை வகித்தார். நிகழ்வில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், புலவர் மா.ராமலிங்கம் ஆகியோர் புகழ் வணக்கத்தையும்,  நினைவஞ்சலி உரையையும் நிகழ்த்தினர்.  
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான கே.எஸ்.மூர்த்தி,  முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் பார்.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, மாவட்ட அவைத்தலைவர் ரா.உடையவர், துணைச் செயலர்கள் பி.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, விமலா சிவக்குமார், பொருளாளர் கே.செல்வம், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப.ராணி, சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் ரா.நக்கீரன், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலர் மு.பரமானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com