ஆர். பட்டணம் கிராமத்தில் நாளை கட்டபொம்மன் நாடகம்

ராசிபுரம் அருகே ஆர்.பட்டணம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ராசிபுரம் அருகே ஆர்.பட்டணம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தியை அடுத்து, அன்னை பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிவாஜி கண்ணன் இயக்கத்தில், நெல்லைச் சீமையின் எல்லைச்சாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற சரித்திர நாடகம் நடைபெறுகிறது. டிராமா ஸ்கோப் வடிவில் பிரமாண்ட அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடகத்தில் சுமார் 25 பேர் பங்கேற்று நடிக்கின்றனர். மறைந்து வரும் நாடக கலைக்கு மீண்டும் புத்துயிர் வழங்கும் வகையில் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com