ஜேசிஐ சங்க வாரவிழாவில் திருச்செங்கோடு கிளை நூலகத்துக்கு அலமாரி மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ஜேசிஐ டெம்பிள் கிளை இயக்கத்தின் யாழினி வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு கிளை நூலகத்துக்கு அலமாரி மற்றும் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. நூலகத்துக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்து வைக்கப்பட்டனர். புரவலர் திட்டத்தில் சங்கத்தினர் இணைந்தனர்.
சிறப்பு விருந்தினராக வள்ளுவன் இண்டஸ்ட்ரீஸ் வள்ளுவன், செனட்டர் கோவிந்தசாமி கலந்து கொண்டனர். நூலகர் சுமதி பேசினார். சியாம் பிரசன்னா தலைமை வகித்தார். டெமிள் தலைவர் நடராஜ், செயலர் செங்குட்டுவன், பொருளாளர் சங்கர் மற்றும் கிளை இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.