நாமக்கல்லில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் சார்பில், தலைக்கவசம் அணிவது தொடர்பான சாலையோர விழிப்புணர்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிக்கு, நாமக்கல் காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன் தலைமை வகித்தார். போக்குவரத்துப் பிரிவு எஸ்.ஐ.க்கள் ரங்கநாதன், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள், விபத்து இல்லாமல் வாகனங்கள் ஓட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், போக்குவரத்து போலீஸார் கலந்துகொண்டனர்.