நாமக்கல் நகரில் திடீர் கன மழை

நாமக்கல் நகரில் வியாழக்கிழமை இரவு திடீரென கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

நாமக்கல் நகரில் வியாழக்கிழமை இரவு திடீரென கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கடந்த சில நாள்களாக நாமக்கல் நகரில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நாமக்கல் நகரப் பகுதி மற்றும் 4 கி.மீ சுற்றளவுக்கு பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்தனர். 
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக நாமக்கல் நகரில் 45 மி.மீ மழைப் பதிவானது.  பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) : எருமப்பட்டி 3, குமாரபாளையம், மோகனூர் 2,  சேந்தமங்கலம் 1 மி.மீ மழை அளவு பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com