குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் 1,109 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.
எக்ஸல் கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் மாலை 2.30 மணிக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன் தலைமையில் நடைபெறவுள்ளது. துணைத்தலைவர் என்.மதன்கார்த்திக் வரவேற்றுப் பேசுகிறார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகிறார்.
எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 337, எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 309, எக்ஸல் தொழில்நுட்பக்கல்லூரியில் இளங்கலையில் 36, எக்ஸல் பிசினஸ் கல்லூரியில் 120, எக்ஸல் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் பி.ஆர்க். பாடப்பிரிவில் 94, எக்ஸல் கல்வியியல் கல்லூரியில் 181, கந்தசாமி கல்வியியல் கல்லூரியில் 32 என மொத்தம் 1,109 மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகின்றனர்.