ரூ. 25 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 550 மஞ்சள் மூட்டைகள் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையானது.


திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 550 மஞ்சள் மூட்டைகள் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. மஞ்சளைக் கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்தனர்.
டெண்டர் மூலம் ரூ. 25 லட்சத்துக்கு 550 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 6, 402 முதல் ரூ. 7,399 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ. 6,288 முதல் ரூ ரூ. 6799 வரை விலைபோனது.
பனங்காளி ரூ. 11,299 முதல் ரூ. 12, 222 வரை விலைபோனது. கடந்த வாரம் 1,210 மஞ்சள் மூட்டைகள் ரூ. 60 லட்சத்துக்கு விலைபோனது. தற்போதைய ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ 200 அதிகம் கிடைத்தது எனக் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com