நாமக்கல்லில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழக வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, ஓவியம், தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டிகளை மாவட்ட வனத்துறை ஏற்பாடு செய்தது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியம், பேச்சுப் போட்டி நடைபெற்றன.
மாவட்ட வன அலுவலர் ரா.காஞ்சனா போட்டியைத் துவக்கி வைத்தார். வனச்சரகர்கள் ரவிச்சந்திரன், பெருமாள், அறிவழகன், உதவி வனப் பாதுகாவலர் சக்திவேல், வனவர்கள், வனப் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் 45 அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வன உயிரின வார விழாவில் பரிசு வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர்கள் செய்திருந்தனர்.