எடப்பாடி பகுதி முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

கிருத்திகை திதியையொட்டி எடப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

கிருத்திகை திதியையொட்டி எடப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள் ஞான பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், பழம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வெண்குற்றம் முருகன் மலைக் கோயிலில் கிருத்திகை திருநாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. மலைக்கோயில் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியின் பல்லக்கு கிரிவலம் நடைபெற்றது. தொடர்ந்து, நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
எடப்பாடியை அடுத்த க.புதூர் கந்தசாமி கோயில், கல்லப்பாளையம் பலமுருகன் கோயில், சித்தூரை அடுத்து பன்னீர் மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com