போலி மருத்துவர் கைது

தாரமங்கலம் அருகே போலி மருத்துவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தாரமங்கலம் அருகே போலி மருத்துவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, கடந்த 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், ஓமலூர் அரசு மருத்துவர் சத்யா தலைமையிலான குழுவினர், சனிக்கிழமை சின்னப்பம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், நோயாளிகளுக்கு செந்தில்குமார் மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவக் குழுவினர் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸார், போலி மருத்துவர் செந்தில்குமாரை கைது செய்தனர்.
காவல் துறை பாதுகாப்புடன் கனகராஜ் உடல் தகனம்
எடப்பாடி, ஏப்.29: ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் உடல் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்த கனகராஜின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது சகோதரர் தனபால் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் பாதுகாப்புடன் ஆத்தூரிலிருந்து தனிவாகனத்தில் கொண்டு வரப்பட்ட உடல் எடப்பாடியை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள சித்திரப்பாளையம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com