கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி க.ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் (2017 - 2018) ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி தலைமையாசிரியர் என்.டி.செல்வம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, பள்ளி வயது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது. பேரணியை மீனாம்பிகா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பெற்றோர்களைச் சந்தித்து அரசின் நலத் திட்டங்கள் குறித்து அச்சிட்ட குறிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக் குழுவினர், அன்னையர் குழுவினர் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.