ஆத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பெரியமாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன்அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோட்டை காயநிர்மலேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.