பெரியார் பல்கலை.யில் சுதந்திர தின விழாப் போட்டிகள்

பெரியார் பல்கலைக்கழக தமிழ்த் துறை சார்பில், 71-ஆவது சுதந்திர தின விழாப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெரியார் பல்கலைக்கழக தமிழ்த் துறை சார்பில், 71-ஆவது சுதந்திர தின விழாப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
 தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தி.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற போட்டிகளை, பதிவாளர் மா.மணிவண்ணன் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, சுடர் எனும் அறிவுடன் என்ற தலைப்பில் கவிதைப் போட்டி, நதிநீர் இணைப்போம் எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டி, மனிதனைத் தேடி எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
 இவ் விழாவில் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், பிறதுறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள், போட்டியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com