எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தை ஆண்டுக்கு 150 நாள்களாக அதிகரிக்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.