சேலத்தில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கழுத்தில் இருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்றார்.
சூரமங்கலம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மல்லிகா (45). இவர் அதிகாலை வீட்டின் வெளியே கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையைப் பறித்து சென்றார்.
இதுதொடர்பாக தகவலறிந்த சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் மர்ம நபரின் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.