ஏ.என்.எஸ். திவ்யம் நகைக்கடைக்கு சிறந்த நகைக் கடைக்கான தேசிய விருது

சேலம் ஏ.என்.எஸ். திவ்யம் நகைக்கடைக்கு சிறந்த நகைக் கடைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் ஏ.என்.எஸ். திவ்யம் நகைக்கடைக்கு சிறந்த நகைக் கடைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
 தென்னிந்தியாவிலேயே சேலம் குரங்குச்சாவடியில் உள்ள ஏ.என்.எஸ். திவ்யம் நகைக் கடைக்கு 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிறப்பு விருதை, அனைத்து இந்திய தங்க நகை சம்மேளனம் வழங்கியுள்ளது.
 இந்தியாவிலேயே முதன் முதலாக நகை விற்பனை நிலையங்களில் பசுமை கட்டடத்துக்காக 2012 ஆம் ஆண்டில் தங்க சான்றிதழ் பெற்றது ஏ.என்.எஸ். திவ்யம் நகைக் கடை என்பது குறிப்பிடத்தக்கது.
 இதுகுறித்து ஏ.என்.எஸ். திவ்யம் நகைக் கடை பங்குதாரர்கள் ஆனந்த்குமார், ஸ்ரீபதிகுமார் ஆகியோர் கூறுகையில், இந்த தேசிய விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இதை எங்களின் முன்னோர்களுக்கும், எங்களின் வழிகாட்டியும் நிறுவனருமான ஆதிநாராயணனுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விருதை சமர்ப்பிக்கிறோம் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com