தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிஸ்வநாதர் உடனுறை காசிவிசாலாட்சி திருக்கோயிலில் சனிப் பிரதோஷ விழா சனிக்கிழமை ( ஆக.19) மாலை 4.30 மணி முதல் நடைபெறுகிறது.
இவ்விழாவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சனிப் பிரதோஷ விழா குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.