வீடு புகுந்து திருட்டு: இருவர் பிடிபட்டனர்

வாழப்பாடியில் பட்டப் பகலில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரம் திருடிய இருவர் பிடிபட்டனர்.

வாழப்பாடியில் பட்டப் பகலில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரம் திருடிய இருவர் பிடிபட்டனர்.
 வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (65). இவரது மகன்கள் சென்னையில் வசித்து வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரவேலும் சென்னைக்கு சென்று விட்டார். இதனால் அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அந்த வீட்டுக்குள் வியாழக்கிழமை இரு இளைஞர்கள் புகுந்தனர்.
 இதனைக்கண்ட குமரவேலுவின் தம்பி வெற்றிவேலின் மனைவி மணிமேகலை என்பவர் கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, வீட்டுக்குள் புகுந்த வேலுôர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34), சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் (31) ஆகியோரை பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த மணிகண்டன், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், குமரவேல் வீட்டில் இருந்து ரூ.10,000 ஐ திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து சேலம் 6-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
 வீடு புகுந்து திருடிய வழக்கில் கண்ணனை வெள்ளிக்கிழமை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிகிச்சை பெற்று வரும் மணிகண்டன் குணமடைந்ததும் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com