எடப்பாடியில் பேருந்துகள் ஆய்வு

எடப்பாடி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

எடப்பாடி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 இதில், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டு, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள், வண்ண விளக்குகள், ஆடியோ, வீடியோ அமைப்புகள் அகற்றப்பட்டன. மேலும், உரிய வழித்தடங்களில் இயக்கப்படாத பேருந்துகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
 சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில் நடைபெற்ற ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் விஸ்வநாதன், தனபால், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இப்பகுதியில் உரிய அனுமதி இன்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்படும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com