சேலம் மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

சங்ககிரி ஒன்றிய ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

சங்ககிரி ஒன்றிய ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
சங்ககிரி - திருச்செங்கோடு பிரிவு சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 
நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவர் இரா.பெருமாள் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் வே.மு.சந்திரன், மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் மாரிமுத்து,  ஒன்றியத் தலைவர் பச்சமுத்து, துணைத் தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூரில்... ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் 61-ஆவது  ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கல்பகனூர், ராமநாயக்கன்பாளையம், காமராஜர் நகர், தென்னங்குடிபாளையம், அம்மம்பாளையம், வளையமாதேவி, புங்கவாடி மற்றும் கூலமேடு கிராமத்தில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில்  ஒன்றியச் செயலர் ப.ராஜீவ்காந்தி, செயலர் அரசுமுதல்வன், சோலை செல்வம்,  தொகுதி துணைச் செயலர் மூ.க.செல்வம், மாவட்ட துணை அமைப்பாளர் கதிரவன், தொண்டரணி அமைப்பாளர் ஆர்.பி.அய்யனார், ஒன்றிய துணைச் செயலர்கள் சு.மனோஜ் பிரபாகரன், செ.நல்லதம்பி,  சு.தங்கவளவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
வாழப்பாடியில்... வாழப்பாடியில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே. அர்த்தனாரி தலைமை வகித்து,  அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்தார். மாவட்டப் பொருளாளர் ஓ.சு.மணி, மாவட்டச் செயலர் குமார்,  இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிமாறன், நகரத் தலைவர் ரவிமணி,  மாவட்ட நிர்வாகிகள் சேலம் முனுசாமி, சதீஷ்குமார், சேலம் பாலா, கவின்குமார், முருகேசன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணி, செந்நிலவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 வாழப்பாடி தெற்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தின அமைதி அணிவகுப்பு பேரணி, ஒன்றியச் செயலர் முல்லைவாணன் தலைமையில் நடைபெற்றது.  நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். 
மாநில துணைச் செயலர் ஆதித்தியன்,  மாவட்ட துணைச் செயலர் ஆதவன்,  செய்தி தொடர்பாளர் நாராயணன் ஆகியோர்,  அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்தனர். மாவட்ட நிர்வாகிகள் அறிவழகன்,  வேல்மணி, கண்ணன், நந்தன், ஒன்றிய நிர்வாகிகள் ஆ.குமார், முருகேசன்,  தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி வடக்கு ஒன்றிய  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் வேல்முருகன் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதி செயலர் கருப்பையா, கட்சி கொடியேற்றி அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்தார். மாவட்ட அமைப்பாளர்கள் அறிவழகன், குறிச்சி வேல்மணி,  கண்ணன், சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மௌன அஞ்சலி செலுத்தினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com