மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே  மர்ம காய்ச்சலால்  7-ஆம் வகுப்பு மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

ஆத்தூர் அருகே  மர்ம காய்ச்சலால்  7-ஆம் வகுப்பு மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆத்தூரை அடுத்த பழனியாபுரியைச் சேர்ந்த விவசாயி முருகன் மகன் சாரதி (12). இவர் சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சாரதி  ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தீவிர  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com