அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசை வலியுறுத்தி, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டச் செயலர் பிரசாந்த் தலைமை வகித்தார். புதுப்பாளையம் மணிகண்டன் வரவேற்றார்.
பாஜக வழக்குரைஞர் அணியின் மாநிலச் செயலர் வாழப்பாடி மணிகண்டன், இந்து முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தண்டபாணி, மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பாஜக நிர்வாகிகள் ஜெய ஆனந்த், பொன். பழனிசாமி, ஆடிட்டர் குப்பமுத்து, வழக்குரைஞர் சண்முகநாதன், அயோத்தி ராமச்சந்திரன், வைத்தியகவுண்டன்புதூர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.