ஓமலூர் அருகே அனுமதியின்றி கிரானைட் கற்களை ஏற்றி வந்ததாக, 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் கனிம வளத் துறையின் சிறப்பு வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த 3 லாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கிரானைட் பாறைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து , லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அனுமதியில்லாமல் கிரானைட் பாறைகளைக் கொண்டுவரும் தனியார் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.