ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜனுக்கு புகார்கள் சென்றன.
இந்தப் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஓமலூர் உட்கோட்ட போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் ஓமலூர் பெரியசாமி, இஸ்மாயில், தாரமங்கலம் சீனி (எ) சீனிவாசன், ஈஸ்வரன், நந்தகுமார், குமார், ஜலகண்டபுரம் ராஜா, தீவட்டிப்பட்டி சுப்பிரமணி ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.