காமராஜர் பிறந்தநாளையொட்டி, தாரமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், எம்.ஜி.ஆர். காலனி நடுநிலைப்பள்ளியில், நடைபெற்ற விழாவுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மா.முருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பொ.பழனிசாமி வரவேற்றார். இவ்விழாவில், மாணவ-மாணவியரின் கவிதை, பேச்சுப் போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முடிவில், இடைநிலை ஆசிரியை ச.காயத்ரி நன்றி கூறினார். இதேபோன்று , தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.