காதல் கணவரைச் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் 3-ஆவது நாளாக தர்னா

கெங்கவல்லி அருகே கடம்பூரில் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் 3-ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கெங்கவல்லி அருகே கடம்பூரில் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் 3-ஆவது நாளாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 கடம்பூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (23). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும் முகநூல் மூலம் நண்பர்களாகி பின்னர் காதலித்துள்ளனர். இதற்கு வெங்கடேசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டு, கடந்த மாதம் கெங்கவல்லி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் மானாமதுரையில் உள்ள மஞ்சுளாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தனது திருமணத்தை பதிவு செய்வதற்காக சான்றிதழ்களை எடுப்பதற்காக கடம்பூருக்கு வந்த வெங்கடேசன் அதற்குப் பிறகு மானாமதுரைக்கு திரும்பிச் செல்லவில்லையாம். இதனையறிந்த மஞ்சுளா, வெங்கடேசன் வீட்டுக்கு வந்தார். அவரை, வெங்கடேசனின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனராம். இதனால் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி மஞ்சுளா தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 கெங்கவல்லி போலீஸார், மஞ்சுளாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமூகப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், தன்னை தாக்கியதாகவும் வெங்கடேசனின் தந்தை செல்வம், தாய் அகிலா உள்பட 7 பேர் மீது மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கடம்பூர் புறக்காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com